கலியுகம்

சனாதன தர்மத்தின் காலகணக்கு:-
.
1 நாள் = 60 நாழிகை (24 மணி)
1 மணி = 2.5 நாழிகை = 60 நிமிடங்கள்
1 நாழிகை = 24 நிமிடங்கள்
1 நாழிகை = 60 விநாழிகை = 24 நிமிடங்கள்
1 நிமிடம் = 2.5 விநாழிகை = 60 விநாடிகள்
1 விநாழிகை = 24 விநாடிகள்
 .
1 விநாழிகை = 60 லிப்தம்
.
24 விநாடிகள்
1 விநாடி = 2.5 லிப்தம் = 100 செண்டி விநாடிகள்
1 லிப்தம் = 40 செண்டி விநாடிகள்
1 லிப்தம் = 60 விலிப்தம்
 .
40 செண்டி விநாடிகள்
1 செண்டி விநாடி = 1.5 விலிப்தம் = 10 மில்லி விநாடிகள்
1 விலிப்தம் = 6.6666 அல்லது 6.7 மில்லி விநாடிகள்
 .
1 விலிப்தம் = 60 பரா 6.7 மில்லி விநாடிகள்
1 மில்லி விநாடி = 8.95 அல்லது 9 பரா = 1000 மைக்ரோ விநாடிகள்
1 பரா = 111 மைக்ரோ விநாடிகள்
1 பரா = 60 தத்பர
111 மைக்ரோ விநாடிகள்
1 மைக்ரோ விநாடி = .5 தத்பரா = 1000 நானோ விநாடிகள்
1 தத்பரா = 2000 நானோ விநாடிகள்
 .
 30 நாள் = 1 மாதம்
 12 மாதங்கள் = 1வருடம்
 60 வருடங்கள் = 1 சுழற்சி (பிரபவ முதல் அக்ஷய வரை)
 3000 சுழற்சிகள் = 1 யுகம்
 4 யுகங்கள் = 1 சதுர்யுகம்
 71 சதுர்யுகங்கள் = 1 மன்வந்தரம்
 14 மன்வந்த்ரங்கள் = 1 கல்பம்
 .
ஒரு கல்பம் என்பது நானூற்று முப்பத்து இரண்டு கோடி மனுட வருடங்கள் (கணக்கதிகாரம்). இதில் பாதி முடிந்து விட்டது.
இப்பொழுது நடந்துகொண்டிருப்பது, த்விதீய பரார்த்தம் – இரண்டாவது பரார்த்தம்.
.
.ஸ்வேதவராஹ கல்பம்* – இரண்டாவது பரார்த்தத்தின் பிரம்மாவின் முதல் நாள் ஸ்வேத வராஹ கல்பம் எனப்படும். வாயு புராணத்தின் கணக்குப்படி மொத்தம் 36 கல்பங்கள் உள்ளன. இந்த உலகத்தை விஷ்ணு வெள்ளைப் பன்றி உருவம் (ஸ்வேத வராஹம்) கொண்டு வெளிக்கொணர்ந்த காலவெள்ளத்தில் உட்பட்டது என்பதால் இது ஸ்வேத வராஹ கல்பம் எனப்பட்டது.
 .
வைவஸ்வத மன்வந்தரம்*  – நடந்து கொண்டிருக்கும் ஸ்வேத வராஹ கல்பம் 14 மன்வந்திரங்களை உள்ளடக்கியது. ஒரு மன்வந்தரம் என்பது 71 சதுர் யுகங்கள் கொண்டது.
 .
14 மன்வந்திரங்களாவன*
 .
1.ஸ்வாயம்புவ மன்வந்திரம்,
2.ஸ்வரோசிஷ மன்வந்திரம்,
3.உத்தம மன்வந்திரம்,
4.தாமச மன்வந்திரம்,
5.ரைவத மன்வந்திரம்,
6.சாக்ஷ¤ஷ மன்வந்திரம்,
7.வைவஸ்வத மன்வந்திரம்,
8.சாவர்ணிக மன்வந்திரம்,
9.தக்ஷ சாவர்ணிக மன்வந்திரம்,
10.ப்ரமஹா சாவர்ணிக மன்வந்திரம்,
11.தர்ம சாவர்ணிக மன்வந்திரம்,
12.ருத்ர சாவர்ணிக மன்வந்திரம்,
13.தேவ சாவர்ணிக மன்வந்திரம்,
14.சந்திர சாவர்ணிக மன்வந்திரம்.
.
ஏழாவது மன்வந்திரமாகிய வைவஸ்வத மன்வந்திரத்தில் இருக்கின்றோம்.
 .
அஷ்டாவிம்சதி (28) தமே கலியுகே –
71 சதுர்யுகங்கள் கொண்டது ஒரு மன்வந்திரம் .
வைவஸ்வத மன்வந்திரத்தினுடைய 71 சதுர்யுகங்கள் கொண்ட பாதையில் 28வது சதுர்யுகத்திலிருக்கும் நான்கு யுகங்களான
.
கிருத யுகம்,
திரேதா யுகம்,
துவாபர யுகம்,
கலியுகம்
என்பதில் வரும் கடைசி யுகமான கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது.
.
இந்தக் கலியுகம் முடிந்து அடுத்த சதுர்யுகம் தொடங்கும். அது 29 வது சதுர்யுகத்தின் கிருத யுகத்தில் தொடங்கும்.
 .
இதுவரை வந்தது கால அளவைகள் அடுத்தது நாம் இருக்கும் இடத்தின் அளவைகள்.
 .
 .*ஜம்பூத்வீபே* –
பரந்த பால்வெளியின் பல அண்டங்களில் ஒரு அண்டத்தின் சின்னஞ்சிறு பாகத்தின் ஒரு மூலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். த்வீபம் என்பது தீவு என்று அர்த்தம். பரந்த பால்வெளிக் கடலில் உள்ள ஒவ்வொரு அண்டமும் ஒரு தீவு போலத்தான். ஏழு தீவுகள் உள்ளன.
 .
1. ஜம்பூ த்வீபம் (நாம் வசிப்பது – நீரால் சூழப்பட்டுள்ளது),
2. பிலக்ஷ த்வீபம்,
3. சான்மலி த்வீபம்,
4. குச த்வீபம்,
5. க்ரௌஞ்ச த்வீபம்,
6. சாக த்வீபம்,
7. புஷ்கர த்வீபம்)
 .
 பாரத வர்ஷே* –
.
த்.வீபங்கள் எனும் தீவுகளுள் ஒன்றான ஜம்புத்வீபம் ஒன்பது வர்ஷங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பாரத வர்ஷத்தில் தான் நாம் வசிக்கின்றோம்.
 .
1. பாரத வர்ஷம்,
2.ஹேமகூட வர்ஷம்,
3. நைஷத வர்ஷத்ம்,
4.இளாவ்ருத வர்ஷம்,
5. ரம்ய வர்ஷம்,
6. ச்வேத வர்ஷம்,
7. குரு வர்ஷம்,
8. பத்ராச்வ வர்ஷம்,
9.கந்தமாதன வர்ஷம்)
 .
 பரத கண்டே –
.
பாரத வர்ஷம் ஒன்பது கண்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது.
 .
1. பரதகண்டம்,
2. கிம்புருகண்டம்,
3. அரிவருடகண்டம்,
4. இளாவிரதகண்டம்,
5. இரமியகண்டம்,
6. இரணியகண்டம்,
7. குருகண்டம்,
8. கேதுமாலகண்டம்,
9.  பத்திராசுவகண்டம
.
இதில் நாம் பரத கண்டத்தில் வசிக்கின்றோம்.
 .
மேரோர் தக்ஷணே பார்ச்வே –
.
பரத கண்டத்திலிருக்கும் மேரு எனும் மலையின் தெற்கு புறத்திலிருக்கின்றோம்.
 .
 எண்ணற்ற பிரம்மாக்களின் சிருஷ்டி வரிசைகளில், ஒரு பிரம்மாவின் படைப்பில், அவரின் இரண்டாவது காலத்தின், முதல் தினத்தில் (கோடிக்கணக்கான வருடங்களுக்கு இடையில்) வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.